For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: 11 பேர் கைது, பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு!

04:45 PM Mar 23, 2024 IST | 1newsnationuser5
மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்  11 பேர் கைது  பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு
Advertisement

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக 11 பேரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

Advertisement

ரஷ்யா நாட்டின் தலைநகரமான மாஸ்கோவில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இசை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கமான குரோகஸ் அரங்கத்திற்குள், திடீரென நுழைந்த ராணுவ உடை அணிந்திருந்த பயங்கரவாதிகள், துப்பாக்கியாலும், வெடி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிது.

இதனால், தாக்குதல் நடத்தப்பட்ட முழு அரங்கமும் தீப்பற்றி எரிந்து நாசமடைந்துள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்தனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முன்னதாக, இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருந்தது.

இதற்கிடையில், இந்த தாக்குதலில் ஈடுபட்டதற்காக பதினொரு பேர் இன்று கைது செய்யப்பட்டனர், கைது செய்யப்பட்டவர்களில் நான்கு ‘பயங்கரவாதிகள்’ என ரஷ்ய அரசு செய்தி நிறுவனங்கள் கிரெம்ளின் மேற்கோள்காட்டி AFP தகவல் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.ரஷ்யாவில் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சூழலில், இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Advertisement