For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தொடங்கியது பருவமழை..!! மக்களே இந்த தவறையெல்லாம் பண்ணாதீங்க..!! ஆபத்து..!!

Now that monsoon has started, what should people do..? In this post you can see what not to do.
08:44 AM Oct 14, 2024 IST | Chella
தொடங்கியது பருவமழை     மக்களே இந்த தவறையெல்லாம் பண்ணாதீங்க     ஆபத்து
Advertisement

தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மக்கள் என்னென்ன செய்ய வேண்டும்..? என்னென்ன செய்யக்கூடாது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

என்ன செய்ய வேண்டும்..?

* மழைக்காலத்தில் குடிநீர் மூலம் நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால், குடிநீரை காய்ச்சி ஆற வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.

* காய்கறி பயறு வகைகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* சமைத்தவுடன் சூடாக உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆறிப்போன உணவுகளால் சளி தொல்லை போன்ற பிற பிரச்சனைகள் ஏற்படலாம்.

* மழைக்காலங்களில் குளிர் அதிகம் இருக்கும் என்பதால் உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள சூப், ரசம், டீ, காபி உள்ளிட்டவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.

* அத்தியாவசிய மளிகைப் பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

* மழைநாள்களில் அடிக்கடி மின்தடை ஏற்படலாம். எனவே பேட்டரி செல், மெழுகுவத்தி கைவசம் இருப்பது முக்கியம்.

  • * மழைக்காலங்களில் திடீர் இடர்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரைகளை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

* மழை காலங்களில் மின் விளக்குகள் மற்றும் மின்சாதன பொருட்களை கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

* வீட்டை சுற்றிலும் மழைநீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* மழைக்காலங்களில் நீர் தேங்கி இருப்பதால், சாலைகளில் பள்ளம் இருப்பது தெரியாது. எனவே, வாகன ஓட்டிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

* சாலையோரம் இருக்கும் மின்சாதன பொருட்களையோ மின் கம்பிகளையும் தொடக்கூடாது.

* மழைக்காலங்களில் கூடுமானவரை வீட்டையும், கழிவறைகளையும் ஈரமில்லாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* வீட்டுக்கு வெளியிலோ, மொட்டை மாடியிலோ, திறந்த வெளியிலோ தேவையற்ற பொருள்களை போட்டு வைப்பதைத் தவிருங்கள். அதில் தண்ணீர் தேங்கி கொசுக்கள், புழுக்கள் போன்றவை முட்டையிட்டு, பெருகி, நோயையும் பெருக்கும் அபாயமுண்டு.

* மழை நேரங்களில் குடிநீரை காய்ச்சி வடிகட்டி அருந்துவது நல்லது. கூடுமானவரை சூடான நீரைப் பருகுவது மிகவும் பாதுகாப்பானது.

* மழைக்காலம் தொடங்கும் முன்பே வீட்டில் இருக்கும் மின்சாதனங்களை பழுதுபார்த்து பராமரித்துக்கொள்வது அவசியம்.

* வெளியில் சென்று வந்தவுடன் சூடான நீரில் குளித்து உடை மாற்றுவது மழைக்கால நோய்களில் இருந்து காக்கும்.

* தொலை தூர பயணங்களை, வானிலை அறிவிப்பு, மழை பெய்ய வாய்ப்பு உள்ளிட்டவற்றைப் பரிசீலித்து முடிவெடுக்கவும்.

என்ன செய்யக் கூடாது..?

* மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும்.

* மின்சார கம்பிகள் அறுந்து விழுந்திருந்தால் அது தொடர்பாக அருகில் இருக்கும் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

* இடி, மின்னலின்போது டிவி, கணினி, செல்போன், மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.

* மழையின் போது வீட்டுச் சுவரில் தண்ணீர் கசிவு ஏற்படாமல் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* மின்கம்பிகளுக்கு அருகிலுள்ள மரங்களுக்கு கீழ் நிற்க கூடாது.

* மழை பெய்து வரும் போது தயிர், வெண்ணெய், நெய் போன்ற குளிர்ச்சியான பொருட்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

Read More : வீடு, மனை வாங்கப் போறீங்களா..? அப்படினா தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை பாருங்க..!!

Tags :
Advertisement