முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பணம் மோசடி வழக்கு..! கைது செய்யப்பட்ட நடிகை ஜெயலட்சுமி சிறையில் அடைப்பு...!

06:43 AM Feb 21, 2024 IST | 1newsnationuser2
Advertisement

கடந்த 2022-ம் ஆண்டு 'சினேகம் பவுண்டேஷன்' பெயரைப் பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக பாடலாசிரியர் சினேகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து தன்மீது சினேகன் அவதூறு பரப்புவதாக கூறி நடிகை ஜெயலட்சுமியும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

Advertisement

இது தொடர்பாக இருவரும் மாறி மாறி காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இதனையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேற்று கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். நீண்ட நேரம் காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக திருமங்கலம் போலீசார், நேற்று நடிகை ஜெயலட்சுமி வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நடிகை ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார்.

Advertisement
Next Article