For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Court: ஓட்டுக்கு பணம்... போராட்டம் நடத்தலாம்...! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி...!

05:29 AM Apr 09, 2024 IST | Vignesh
court  ஓட்டுக்கு பணம்     போராட்டம் நடத்தலாம்     சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
Advertisement

தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வழக்கத்தை தவிர்க்கக் கோரி மருமலர்ச்சி மக்கள் இயக்கம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி அளித்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

வாக்கிற்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை ஒழிக்கக் கோரி 5 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி கோவையைச் சேர்ந்த மருமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனுதாரர் ஈஸ்வரன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபூர்வாலா, நீதிபதி ஜே.சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

ஜனநாயகத்தில் ஒரு வாக்கு மூலம் நாட்டின் தலைவிதியை தீர்மானிக்க முடியும், எனவே வாக்குரிமையை பாதுகாப்பது தேர்தல் ஆணையத்தின் கடமை என்று மனுதாரர் தெரிவித்தார். அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்கும் பண கலாச்சாரத்தால் வாக்காளர்களுக்கு நல்ல பிரதிநிதிகளை பெற முடியவில்லை என்றும், தேர்தல் ஆணையத்தால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் மனுதாரர் கூறினார்.

உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி கோரிய மனுதாரர் தரப்பு மனுவை மறுபரிசீலனை செய்து ஆணையம் அனுமதித்ததாக தேர்தல் ஆணையத்தின் நிலை வழக்கறிஞர் தெரிவித்தார். உண்ணாவிரதப் போராட்டத்தை ஏப்ரல் 11ஆம் தேதி ஒரு நாள் மட்டும் நிபந்தனைகளுடன் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் வழக்கறிஞர் தெரிவித்தார். சமர்பிக்கப்பட்ட பிறகு பெஞ்ச் மனுவை தள்ளுபடி செய்தது..

Advertisement