முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெற்ற மகளுக்கு தாய் செய்யும் காரியமா இது..? 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை பாருங்க..!!

A woman who separated from her husband and lived with her daughter in Chennai forced her daughter into prostitution to settle a debt.
09:02 AM Aug 16, 2024 IST | Chella
Advertisement

சென்னையில் கணவரைப் பிரிந்து மகளுடன் வாழ்ந்து வந்த பெண் ஒருவர், கடனை தீர்ப்பதற்காக பெற்ற மகளையே விபச்சாரத்தில் தள்ளிய கொடுமை அரங்கேறியுள்ளது.

Advertisement

கணவரின் இறப்புக்கு பின் குடும்பத்திற்கு சரியான வருமானம் இல்லாமல் வறுமையில் இருந்து வந்துள்ளார் அப்பெண். இதனால், மகளின் பள்ளிப்படிப்பையும் பாதியில் நிறுத்தியுள்ளார். இந்நிலையில், 2021ஆம் ஆண்டு அவசரமாகப் பணம் தேவைப்பட்டபோது, முத்துலட்சுமி என்பவரிடம் ரூ.40,000 கடன் வாங்கியிருக்கிறார். இந்த முத்துலட்சுமி பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளார். இவரிடம் வாங்கிய பணத்தைத் திரும்பச் செலுத்த முடியாத நிலையில், பணத்திற்கு பதிலாக தன் மகளை முத்துலட்சுமியிடம் ஒப்படைத்து பாலியல் தொழிலில் தள்ளிவிட்டார்.

முத்துலட்சுமி 14 வயது சிறுமியை 2021 - 2023ஆம் ஆண்டு வரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். இதனால் அந்தச் சிறுமியில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு இருக்க முடியாமல் வீட்டிற்குத் தப்பித்து வந்துள்ளார். கொஞ்சம் கூட இரக்கம் இல்லாத தாய் மீண்டும் அந்தச் சிறுமியை முத்துலட்சுமியிடமே அனுப்பி வைத்துள்ளார். மீண்டும் முத்துலட்சுமியிடம் இருந்து தப்பித்துச் சென்ற சிறுமி, தனக்கு அடைக்கலம் கொடுத்த ஒருவரின் துணையுடன் மணலி பகுதியில் 8 மாதமாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம் சிறுமியின் தாய் அவரைத் தொடர்புகொண்டு மீண்டும் முத்துலட்சுமியிடம் செல்லுமாறு திட்டியுள்ளார். ஆனால், தாயின் பேச்சைக் கேட்டு மன வேதனை அடைந்த சிறுமி, காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் தாய், புரோக்கர் முத்துலட்சுமி (36), அவரது கணவர் நிஷாந்த் (37), மகேஸ்வரன் (24), கிஷோர் (22), அஜித் குமார் (20) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Read More : அடுத்த 4 நாட்களுக்கு கனமழை அலர்ட்..!! இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது..!!

Tags :
14 வயது சிறுமிகடன் தொல்லைசென்னை
Advertisement
Next Article