For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது’..!! முதல்வர் முக.ஸ்டாலின் கடும் விமர்சனம்..!!

11:10 AM Mar 30, 2024 IST | Chella
’மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது’     முதல்வர் முக ஸ்டாலின் கடும் விமர்சனம்
Advertisement

மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது. தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? என முதலமைச்சர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 20 நாட்களே உள்ளன. பரப்புரைக்கு 18 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ”பிரதமர் மோடி அவர்களே… கருப்புப் பணம் மீட்பு, மீனவர்கள் பாதுகாப்பு, 2 கோடி வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு போல் காற்றில் கரைந்த உங்கள் கேரண்டிகளில் ஒன்று தான், அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு.

விமானங்களில் மட்டுமல்ல. தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ, ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை. 'எங்கும் இந்தி! எதிலும் இந்தி!' என மாற்றியது தான் மோடி அரசின் அவலச் சாதனை! தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்! என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Read More : ’பத்திரிகையாளரையே சந்திக்க பயப்படும் மோடியிடம் வீரத்தை பற்றி பேசி என்ன பயன்’..!! விளாசிய கமல்..!!

Advertisement