முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நாளை மறுநாள் உருவாகிறது ”மிக்ஜாம் புயல்”..!! தமிழகத்தை நோக்கி நகரும் என எச்சரிக்கை..!!

10:52 AM Nov 30, 2023 IST | 1newsnationuser6
Advertisement

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 4 நாட்களாகவே எப்போது மழை வரும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. இன்னும் எத்தனை நாட்கள் தொடரும் என்பதே சென்னை வாசிகளின் எண்ண ஓட்டமாக இருந்து வருகிறது. வடகிழக்கு பருவமழையும் தீவிரமடைந்துள்ளதால், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களும் மழை பெய்து வருகிறது.

Advertisement

இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், நாளை மறுநாள் “மிக்ஜாம் புயல்” உருவாகி தமிழ்நாட்டை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.

Tags :
கனமழை எச்சரிக்கைதமிழ்நாடுமிக்ஜாம் புயல்வடகிழக்கு பருவமழைவானிலை ஆய்வு மையம்
Advertisement
Next Article