For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மைனர் பொண்ணு..!! பாய்ந்தது போக்சோ..!! நடன இயக்குனர் ஜானி இடை நீக்கம்..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!!

Not only in the Telugu film industry, but also in the Indian film industry, the sexual accusation against the choreographer Johnny has created a stir.
10:58 AM Sep 19, 2024 IST | Chella
மைனர் பொண்ணு     பாய்ந்தது போக்சோ     நடன இயக்குனர் ஜானி இடை நீக்கம்     வெளியான அதிரடி அறிவிப்பு
Advertisement

தெலுங்கு திரையுலகத்தில் மட்டுமின்றி, இந்தியத் திரையுலகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நடன இயக்குனர் ஜானி மீதான பாலியல் குற்றச்சாட்டு. 21 வயதான நடனப் பெண் ஒருவர் கொடுத்த புகார் காரணமாக அவர் மீது போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது. பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இருந்த அவரை கட்சியில் இருந்தும் உடனடியாக நீக்கினார்கள்.

Advertisement

இந்நிலையில் தெலுங்கு பிலிம் சேம்பர் தற்போது ஜானி மீதான விசாரணையைத் துவக்கியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2019இல் இருந்தே அந்தப் பெண் நடனக் குழுவில் இடம் பெற்று வந்துள்ளார். ஒரு மைனர் பெண்ணை எப்படி நடனக்குழுவில் ஜானி சேர்த்தார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிட்டி விசாரணையை நடத்தி வருவதாக பிலிம் சேம்பர் அறிவித்துள்ளது. தற்போது தெலுங்கு சினிமா மற்றும் டிவி டான்சர் மற்றும் டான்ஸ் டைரக்டர்ஸ் அசோசியேஷன் தலைவராக உள்ள ஜானியின் தலைவர் பதவியின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படியும் அந்த சங்கத்தினரை தெலுங்கு பிலிம் சேம்பர் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், திரைத்துறையைச் சேர்ந்த பெண்கள் பாலியல் தொல்லைகள் பற்றி புகார் அளிக்க தனியாக புகார் பெட்டி ஒன்றை சேம்பர் அலுவலக வாயிலில் வைத்துள்ளோம். அதில் புகார் அளிக்கலாம். அவர்களது புகார் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் சேம்பர் சார்பா அதன் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ’என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு பிக்பாஸுக்கு போனது தான்’..!! ’குடிப்பழக்கத்தால் இப்படி இருக்கேன்’..!! நடிகர் சக்தி வேதனை..!!

Tags :
Advertisement