முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த அமைச்சர்கள் ராஜினாமா..!! பெரும் பரபரப்பு..!!

2 Maldivian ministers have resigned after criticizing PM Modi.
08:16 AM Sep 11, 2024 IST | Chella
Advertisement

பிரதமர் மோடியை விமர்சித்த 2 மாலத்தீவு அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

Advertisement

பிரதமர் மோடி கடந்த சில மாதங்களுக்கு முன், அரசு முறை பயணமாக லட்சத் தீவு சென்றிருந்தார். அந்த பயணத்தின் புகைப்படங்கள், வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். இது படு வைரலாகின. பிரதமரின் பயணம் காரணமாக இரண்டு நாட்களாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக லட்சத்தீவு தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது.

இதன் காரணமாக சுற்றுலாத் துறையை நம்பி வாழும் இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு அதிர்ச்சி அடைந்தது. இதைத்தொடர்ந்து மாலத்தீவு அமைச்சர்கள் மரியம் ஷியுனா, அப்துல்லா மஹ்சூம் மஜித், மால்ஷா ஷெரீப், ஆளும் கட்சி மூத்த தலைவர் ஜாகித் ரமீஸ் ஆகியோர்கள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தனர். இதற்கு இந்தியர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் மரியம் ஷியுனா, அப்துல்லா மஹ்சூம் மஜித், மால்ஷா ஷெரீப் ஆகியோர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர். இந்நிலையில், மாலத்தீவு அதிபர் மொய்சூ விரைவில் இந்தியா வரவுள்ள நிலையில், 2 பேர் அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளனர்.

Read More : ஓடிடியில் வெளியாகும் தங்கலான், வாழை..!! எப்போது எந்த தளத்தில் தெரியுமா..?

Tags :
பிரதமர் மோடிமாலத்தீவு அமைச்சர்கள்ராஜினாமாவிமர்சனம்
Advertisement
Next Article