For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'மிக்ஜாம்' புயல் பாதிப்பு..!! ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம் பிடித்தம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

01:26 PM Dec 07, 2023 IST | 1newsnationuser6
 மிக்ஜாம்  புயல் பாதிப்பு     ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம் பிடித்தம்     வெளியான முக்கிய அறிவிப்பு
Advertisement

மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கடுமையான கனமழை பெய்தது. இதில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் நிலைகுலைந்து போயின. இதனைத் தொடர்ந்து புயல் பாதிப்பை சரி செய்ய மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமாக ரூ.561 கோடி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisement

இந்நிலையில், பல தரப்பினரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வரும் நிலையில், புயல் நிவாரணத்திற்காக ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அனைத்து ஆசிரியர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்து கொள்ளுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Tags :
Advertisement