முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மாஸ்டர் பிளான்..!! கள்ளக்காதலியை கொன்று ஆட்சியர் வீட்டருகே புதைத்த காதலன்..!! சினிமா பாணியில் அதிரவைக்கும் சம்பவம்..!!

Vimal Soni has had an affair with Ekta Gupta, the wife of a stockbroker.
10:34 AM Oct 28, 2024 IST | Chella
Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் சிவில் லைன்ஸ் பகுதியை சேர்ந்த விமல் சோனி என்பவர் ஜிம் நடத்தி வருகிறார். இவரது ஜிம்மில் அதே சிவில் லைன்ஸ் குடியிருப்பாளர் ஏக்தா குப்தா (32) என்ற பெண் உடற்பயிற்சிக்கு சென்று வந்துள்ளார். கடந்த ஜூன் 24ஆம் தேதி ஜிம்முக்கு சென்ற ஏக்தா குப்தா திடீரென மாயமாகியுள்ளார்.

Advertisement

இது குறித்து கணவரான பங்கு சந்தை தரகர் குப்தா போலீசில் புகாரளித்தார். ஆனால், ஏக்தா குப்தா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், 4 மாதத்துக்கு பிறகு இந்த வழக்கில் துப்பு துலங்கியுள்ளது. ஏக்தாவை கொலை செய்ததாக ஜிம் பயிற்சியாளர் விமல் சோனி கைது செய்யப்பட்டுள்ளார். இசம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ”பங்கு சந்தை தரகரின் மனைவியான ஏக்தா குப்தாவுடன் விமல் சோனிக்கு கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், விமல் சோனிக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடக்கவிருந்தது. இதற்கு, ஏக்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசுவதற்காக கடந்த ஜூன் 24ஆம் தேதி ஏக்தா குப்தாவை தனி இடத்திற்கு விமல் சோனி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு விமல் சோனிக்கும், ஏக்தா குப்தாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த விமல், சோனி ஏக்தா குப்தாவின் கழுத்தில் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உடனே அவரது உடலை கான்பூர் ஆட்சியர் பங்களா வளாகத்துக்கு கொண்டு சென்று விமல் சோனி புதைத்துள்ளார். மாவட்ட ஆட்சியர் வீட்டருகே புதைத்தால் காவல்துறைக்கு சந்தேகம் வராது என்பதால் விமல் சோனி இவ்வாறு செய்துள்ளார். மேலும், அவ்வாறு உடலை புதைக்கும்போது விமல் சோனி தன் செல்போனை பயன்படுத்தாமல் திட்டமிட்டு செயல்பட்டுள்ளார். பாபநாசம் படத்தில் வருவது போல், ஆட்சியர் பங்களா வளாகத்தில் கொல்லப்பட்டவரின் உடலை புதைத்தால் போலீசார் தேட மாட்டார்கள் என யோசித்து அதன்படி விமல் சோனி செயல்பட்டுள்ளார்” என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Read More : சூப்பர் வேலை..!! மாதந்தோறும் லட்சத்தில் சம்பாதிக்கலாம்..!! விண்ணப்பிக்க நவ.8ஆம் தேதியே கடைசி..!!

Tags :
உத்தரப்பிரதேச மாநிலம்கள்ளக்காதலன்கள்ளக்காதல்கொலை வழக்கு
Advertisement
Next Article