For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஏலத்தில் தவறுதலாக எடுக்கப்பட்ட வீரரால் பஞ்சாப் அணி மாஸ் வெற்றி..!! சஷாங்க் சிங்கிற்கு குவியும் வாழ்த்து..!!

12:01 PM Apr 05, 2024 IST | Chella
ஏலத்தில் தவறுதலாக எடுக்கப்பட்ட வீரரால் பஞ்சாப் அணி மாஸ் வெற்றி     சஷாங்க் சிங்கிற்கு குவியும் வாழ்த்து
Advertisement

ஐபிஎல் போட்டியின் 17-ஆவது ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது. இதற்கு முக்கிய காரணமானவர் 32 வயதான சஷாங்க் சிங். இவரை பஞ்சாப் அணி ஏலத்தில் ரூ.20 லட்சத்துக்கு எடுத்தது. ஆனால், அவர்கள் எடுக்க நினைத்தது, 19 வயதான சஷாங்க் சிங். ஆனாலும், பஞ்சாப் அணி அவருக்கு வாய்ப்பளித்தது.

Advertisement

15 ஐபிஎல் போட்டிகளில் 9 இன்னிங்ஸில் பேட்டிங் விளையாடி 160 ரன்கள் எடுத்துள்ளார். சன்ரைசர்ஸ் அணியில் விளையாடி வந்த இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்றையப் போட்டியில் 200 ரன்கள் என்ற இலக்கினை விரட்டும்போது, சீனியர் வீரர்கள் ஆட்டமிழக்க குறைவான ஆட்டம் ஆடிய சஷாங்க் சிங் 29 பந்துகளில் 61 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

ஆட்ட நாயகன் விருதுபெற்ற சஷாங்க் சிங்குக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தன்னம்பிக்கை நிரம்பியுள்ளதாக பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Read More : Lok Sabha | தேர்தலில் வாக்களிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை..? வாக்காளர்களே மறந்துறாதீங்க..!!

Advertisement