முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’மசாஜ் சிறப்பா இருந்துச்சு’..!! ’இப்போ அது எங்களுக்கு வேணும்’..!! பெண்களிடம் அத்துமீறிய வாலிபர்கள்..!! நடுரோட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்..!!

The youth asked the women working at the massage center to have sex after the massage.
06:49 PM Sep 28, 2024 IST | Chella
Advertisement

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தலமாகும். அங்கு சுற்றுலா வந்தவர்கள் கொடைக்கானலை சேர்ந்த ஒரு நபரிடம் மசாஜ் சென்டருக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளனர். அதன்படி, அண்ணா சாலையில் உள்ள தனியார் விடுதியில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டருக்கு 4 வாலிபர்களையும் அவர் அழைத்துச் சென்றுள்ளார்.

Advertisement

மசாஜ் சென்டருக்குள் ஒருவர் சென்று மசாஜ் முடித்த பிறகு வெளியே வந்துள்ளார் . அப்போது பணம் கேட்டதற்கு என்னுடைய நண்பர்கள் மீதமுள்ள 3 பேர் உள்ளனர். அவர்களையும் தாம் அழைத்து வருவதாக கூறி மூன்று பேரையும் மசாஜ் சென்டருக்குள் அழைத்துச் சென்றுள்ளார். மசாஜ் முடிந்த பிறகு உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டுமென்று மசாஜ் சென்டரில் பணிபுரியும் பெண்களிடம் அந்த வாலிபர்கள் கேட்டுள்ளனர்.

அப்போது அவர்கள் இங்கு மசாஜ் மட்டும்தான் செய்யப்படும் என்று கூறிய நிலையில், மசாஜ் செய்யும் பெண்களுக்கும் இந்த வாலிபர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 4 வாலிபர்களும் ஒருவர் தாம் போலீஸ் என்றும் ஒருவர் தாம் பத்திரிகையாளர் என்றும் மிரட்டி அவர்களை வீடியோ எடுக்க ஆரம்பித்துள்ளனர். அச்சமடைந்த மசாஜ் சென்டரில் பணிபுரியும் பெண்கள் செய்வது அறியாது திகைத்த நிலையில், நீங்கள் மசாஜ்க்கு பதில் பாலியல் தொழில் செய்து வருவதாக வெளியில் கூறி உங்களை போலீசில் புகார் செய்வோம் என்று மிரட்டிய நிலையில், மசாஜ் சென்டருக்குள் இருந்து வெளியே வர பெண்கள் முயற்சித்துள்ளனர்.

அப்போது, வாலிபர் ஒருவர் பெண்கள் வெளியே செல்வதையும் வீடியோவாக எடுத்து வந்த நிலையில், அவர்களை கையைப் பிடித்து இழுத்து வெளியே செல்ல விடாமல், துன்புறுத்திய காட்சிகளை அந்த வாலிபரின் ஒருவரே வீடியோவாக எடுத்துள்ளார். அப்போது அலறியடித்து பெண்கள் அந்த விடுதியை விட்டு வெளியே செல்லும் போது, ஹோட்டலில் உள்ள கண்ணாடியையும் உடைத்து வாலிபர்கள் அந்த பெண்களை பரபரப்பான அண்ணாசாலையில் துரத்தியுள்ளனர்.

இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த 4 வாலிபர்களையும் கைது செய்தனர். மேலும், கொடைக்கானலில் உள்ள மசாஜ் சென்டர்களை முழுமையாக காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்றும் மசாஜ் சென்டரில் பெயரில் வேறு தொழில் நடக்காமல் தடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Read More : இளம்பெண்களுடன் நிர்வாண வீடியோ கால்..!! ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்த இளைஞர்..!! கடைசியில் வைத்த ட்விஸ்ட்..!!

Tags :
உடலுறவுகொடைக்கானல்திண்டுக்கல் மாவட்டம்மசாஜ் சென்டர்வாலிபர்கள்
Advertisement
Next Article