For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Masi Amavasya 2024!… இன்றைய தினம் என்ன சிறப்பு தெரியுமா? கர்மவினைகள் கழிக்க இந்த பரிகாரங்களை செய்யுங்கள்!

06:20 AM Mar 10, 2024 IST | 1newsnationuser3
masi amavasya 2024 … இன்றைய தினம் என்ன சிறப்பு தெரியுமா  கர்மவினைகள் கழிக்க இந்த பரிகாரங்களை செய்யுங்கள்
Advertisement

Masi Amavasya: அமாவாசை என்பது முன்னோர் வழிபாட்டிற்குரிய நாள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நம்முடைய முன்னோர்களுக்காக விரதம் இருப்பது, தர்ப்பணம் கொடுப்பது ஆகியவற்றை செய்தாலும் தெய்வங்களுக்கு உரிய வழிபாடு மற்றும் நம்முடைய பிரச்சனைகள் தீருவதற்கான பரிகாரங்கள் ஆகியவற்றையும் செய்வதற்கு இது மிக முக்கியமான நாளாகும். அதிலும் இந்த ஆண்டு மாசி மாதம் வரும் அமாவாசை மிகவும் விசேஷமானதாகும். மாசி மாத அமாவாசையானது மார்ச் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று நிகழ்கிறது. சூரிய பகவான், முன்னோர்களுக்குரிய கிரகமாவார். அவருக்கு உரிய ஞாயிற்றுக்கிழமையில் அமாவாசை வருவது மிகவும் சிறப்பானதாகும்.

Advertisement

நேற்று மாலை 06.01 மணிக்கு துவங்கிய மாசி அமாவாசை, இன்றுமாலை 03.39 வரை நீகழ்கிறது. இந்த நாளில் முன்னோர்களை வழிபட்ட பிறகு, நம்முடைய பிரச்சனைகள் தீருவதற்கான வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொதுவாக வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணம் நம்முடைய கர்மவினையாக தான் இருக்கும். இந்த கர்மவினைகள் கழிவதற்கு உரிய பரிகாரங்களை செய்வதற்கு மிகவும் ஏற்ற நாள் அமாவாசை ஆகும். நீண்ட நாட்களாக இருக்கும் கடன் பிரச்சனை தீர வேண்டும், நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நல்ல செய்தி உங்கள் வீடு தேடி வர வேண்டும், கர்மவினைகள் விலகி நல்லது நடக்க வேண்டும், பித்ரு தோஷம், பித்ரு சாபம் நீங்க வேண்டும் என்பவர்கள் அமாவாசையில் இந்த எளிய பரிகாரத்தை செய்யலாம்.

மாசி மாத அமாவாசை அன்று முன்னோர்கள் வழிபாட்டை முடித்த பிறகு, வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும். பிறகு வீட்டில் பயன்படுத்த வைத்திருந்த வெல்லமே அல்லது புதிதாக சிறு துண்டு அளவிற்கு பனை வெல்லத்தையோ எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு தட்டில் வைத்து வீட்டில் உள்ள அம்மன் படம் அல்லது குலதெய்வத்தின் படத்திற்கு முன் வைக்க வேண்டும். பிறகு அந்த வெல்லத்தை உங்களின் வலது உள்ளங்கையில் எடுத்து வைத்து, கண்களை மூடி உங்களின் வேண்டுதல் எதுவோ அதை சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி வர வேண்டும் என்பது உள்ள வேண்டுதல்களை முன்வைத்து வேண்டிக் கொள்ளுங்கள்.

பிறகு அந்த வெல்லத்தை எடுத்துக் கொண்டு வீட்டின் நிலை வாசலுக்கு வெளியே சென்று, அந்த வெல்லத்தை பொடியாக ஆக்கி, வீட்டின் வெளிப்புறம், நிலைவாசலுக்கு அருகில் தூவி விடுங்கள். இப்படி நீங்கள் தூவி விடும் வெல்லத்தை சிறிது நேரத்தில் நூற்றுக்கணக்கான எறும்புகள் வந்து எடுத்துச் செல்லும். இது நூற்றுக்கணக்கான உயிர்களுக்கு அன்னதானம் அளித்த பலனை உங்களுக்கு பெற்றுத் தரும். இதனால் உங்களின் கர்மவினைகள் நீங்கி, பல அற்புதமான மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும். பித்ருக்களின் ஆசிகளும் கிடைக்கும்.

Tags :
Advertisement