முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தியாகிகளுக்கான ஓய்வூதியம் அதிரடி உயர்வு..!! எவ்வளவு தெரியுமா..? அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

The monthly pension of freedom fighters will be increased from Rs 20,000 to Rs 21,000 and the family pension of martyrs will be increased from Rs 11,000 to Rs 11,500.
10:27 AM Aug 15, 2024 IST | Chella
Advertisement

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றினார். பின்னர் உரையாற்றிய அவர், "நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த விடுதலை நாள் வாழ்த்துகள். விடுதலையை பாடுபட்டு பெற்றுக் கொடுத்த தியாகிகளை போற்றுவோம். விடுதலை எளிதாக கிடைக்கவில்லை; 300 ஆண்டுகால போராட்டத்துக்கு பிறகு கிடைத்த சுதந்திரம் இது" என்று பேசினார்.

Advertisement

தொடர்ந்து பேசிய அவர், ”முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் திறக்கப்படும். இதில் சிறப்பாக செயல்படும் மருந்தாளுனர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடன் உதவியோடு ரூ.3 லட்சம் மானியம் அரசால் வழங்கப்படும். 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 75,000 மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்” என்று அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கன மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20,000இல் இருந்து ரூ.21,000ஆக உயர்த்தப்படும் என்றும் தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூ.11,000இல் இருந்து ரூ.11,500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், கட்டபொம்மன், வ.உ.சி. மருது சகோதரர்களின் வழித்தோன்றல்களுக்கான ஓய்வூதியம் ரூ.10,500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Read More : மத்திய அரசின் அசத்தல் திட்டம்..!! வெறும் ரூ.210 முதலீடு செய்து மாதம் ரூ.5,000 வருமானம் பெறலாம்..!! இணைவது எப்படி..?

Tags :
ஓய்வூதியம் உயர்வுசுதந்திர தினம்தியாகிகள்முதல்வர் முக.ஸ்டாலின்
Advertisement
Next Article