முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

திருமணம், முதியோர் உதவித்தொகை பெற வேண்டுமா...? 28-ம் தேதி நடைபெறும் சிறப்பு முகாம்...!

Marriage, whether to get old age pension
07:25 AM Oct 24, 2024 IST | Vignesh
Advertisement

சீர்மரபினர் வாரியத்தில் புதியதாக உறுப்பினர் பதிவு செய்துக் கொள்ளவும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெரும் முகாம் 28-ம் தேதி நடைபெற உள்ளது.

Advertisement

தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்கு கண்ணாடி செலவுத்தொகை ஈடுசெய்தல், முதியோர் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேற்படி நலத்திட்ட உதவிகள் பெற சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள். 18 வயது முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள், அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

சீர்மரபினர் வாரியத்தில் புதியதாக உறுப்பினர் பதிவு செய்துக் கொள்ளவும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுதல் தொடர்பாக வருகின்ற 28.10.2024 அன்று முற்பகல் 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது. சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள் மேற்படி முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

Tags :
dharmapuri dtScholarshiptn governmenttn govt
Advertisement
Next Article