For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வீட்டில் தங்க நகைகளை கவரிங்குடன் ஒன்றாக வைக்க கூடாது..! செவ்வாய் அன்று அணிந்திருக்கும் நகைகளை கழட்ட கூடாது..! தங்கம் பெருக செய்ய வேண்டியவை..!

07:44 PM Feb 10, 2024 IST | 1newsnationuser5
வீட்டில் தங்க நகைகளை கவரிங்குடன் ஒன்றாக வைக்க கூடாது    செவ்வாய் அன்று அணிந்திருக்கும் நகைகளை கழட்ட கூடாது    தங்கம் பெருக செய்ய வேண்டியவை
Advertisement

தற்போதுள்ள காலகட்டத்தில் தங்கம் என்பது பலர் வீடுகளிலும் மிகவும் முக்கியமான பொருளாக கருதப்பட்டு வருகிறது. பணமாக சேமித்து வைப்பதை விட தங்கமாக சேமித்து வைப்பது எதிர்காலத்திற்கு மிகவும் சிறந்ததாக கருதப்பட்டு வருகிறது. இதனாலே பெண்கள், ஆண்கள் என பலரும் தங்கம் வீட்டில் அதிகரிக்க வேண்டும் என்று விரும்பி வருகின்றனர்.

Advertisement

நடுத்தர குடும்பத்தில் இருந்து செல்வந்தர்கள் வரை தங்கத்தின் மீது ஆர்வமாக இருந்து வருகின்றனர். நடுத்தர குடும்பத்தினர் பல கஷ்டங்களை கடந்த பின்னர் தான் வாங்க முடியும். தங்கம் வீட்டில் மேன்மேலும் பெருக இந்த மந்திரத்தை சொன்னால் போதும். மேலும் ஒரு சில செயல்முறைகளை பின்பற்றுவதன் மூலம் தங்கம் வீட்டில் குவியும்.

பொதுவாக தங்க நகைகள் வாங்கிய பின்பு வீட்டில் கவரிங் நகைகளுடன் ஒன்றாக வைக்க கூடாது. அணிந்திருக்கும் தங்க நகைகளை வெள்ளி, செவ்வாய் கிழமை அன்று கழட்ட கூடாது. குளிக்கும்போது மற்ற வேலைகள் செய்யும்போது தங்க நகைகளை  கண்ட இடங்களில் கழட்டி வைக்கக் கூடாது. இது நாம் தங்கத்தை அவமதிப்பது போன்ற செயலாக இருக்கும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் எப்போதும் நல்ல நாள் பார்த்து தங்கம் வாங்க செல்ல வேண்டும். அவ்வாறு தங்கம் வாங்க செல்வதற்கு முன்பாக 108 முறை "ஓம் தங்க கணபதி வசிய வசிய நமஹ" இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு செல்வது நல்லது. இவ்வாறு மந்திரம் சொல்லும்போது நாம் வாங்கும் தங்கம் வீட்டில் மேன்மேலும் பெருகும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement