முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வலையில் சிக்கும் மன்சூர் அலிகான்..!! காவல்துறை எடுத்த முடிவு..!! அடுத்து நடக்கப்போவது என்ன..?

02:55 PM Nov 22, 2023 IST | 1newsnationuser6
Advertisement

கடந்த சில நாட்களுக்கு முன் மன்சூர் அலிகான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பெரும் சர்ச்சைக்குள்ளானது. அவர் அளித்திருந்த பேட்டியில், ஆரம்ப காலகட்டத்தில் படங்களில் நடிக்க கூப்பிட்டால் கதாநாயகியை ரேப் செய்வது போல காட்சிகள் இருக்கும். அதேபோல, லியோ படத்தில் லோகேஷ் அழைத்தவுடன் நடிகை த்ரிஷா என்றவுடன் அதுபோல காட்சி இருக்கும் என நினைத்தேன். ஆனால் அப்படி இல்லை என தெரிவித்திருந்தார்.

Advertisement

மன்சூர் அலிகானின் இந்த பேச்சு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், இவருக்கு கண்டனங்களும் வலுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் மீது சட்டப்பிரிவு 509ன் கீழ் மற்றும் இதர தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் மீது பேச்சு, செயல் மூலம் பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுதல் (IPC 354 a), பெண்களை அவமதிக்கும் விதத்தில் பேசுவது (IPC 509) ஆகிய 2 பிரிவுகள் கீழ் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Tags :
நடிகர் மன்சூர் அலிகான்நடிகை த்ரிஷாலியோலியோ திரைப்படம்
Advertisement
Next Article