For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

KARNATAKA| காப்பி அடித்ததை கண்டித்ததால் விபரீதம்.! கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை.!

04:13 PM Feb 20, 2024 IST | 1newsnationuser4
karnataka  காப்பி அடித்ததை கண்டித்ததால் விபரீதம்   கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை
Advertisement

கர்நாடக மாநிலத்தில் படித்து வந்த பீகாரை சேர்ந்த மாணவன், பல்கலைக்கழக வளாகத்தின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மணிபால் பல்கலைக்கழகத்தில், பீகாரைச் சேர்ந்த சத்தியம் சுமன் என்ற 20 வயது மாணவன், இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்டப் படிப்பில் படித்து வந்திருக்கிறான். இந்நிலையில் கல்லூரியில் நடைபெற்ற தேர்வின் போது மாணவன் காப்பியடித்ததாக தெரிகிறது. இதனை கையும் களவுமாக பிடித்த தேர்வு கண்காணிப்பாளர் மாணவனை திட்டி தேர்வு அறையில் இருந்து வெளியேற்றி இருக்கிறார்.

இந்த சம்பவத்தால் மன வேதனை அடைந்த மாணவன் கல்லூரியின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டான் இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்த மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வு அறையில் இருந்து வெளியேற்றியதால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

English Summary: Karnataka's manipal university student commits suicide by jumping from university top floor.Police probe investigation

Read more: https://1newsnation.com/2-men-were-arrested-for-sending-obscene-pictures-to-a-woman-in-social-media/

Tags :
Advertisement