For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வீடியோ: இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த கட்டிட தொழிலாளி.! கம்பத்தில் கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள்.!

02:04 PM Jan 11, 2024 IST | 1newsnationuser7
வீடியோ  இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த கட்டிட தொழிலாளி   கம்பத்தில் கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள்
Advertisement

கர்நாடக மாநிலத்தில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நபர் போஸ்ட் கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த நம்பரை மீட்ட காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

Advertisement

கர்நாடக மாநிலம் ஹூபள்ளி மாவட்டத்தில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் லாட் சாப் என்ற நபர் வேலை செய்து வந்தார். இவர் தன்னுடைய கட்டுமான பணி நடக்கும் கட்டிடத்திற்கு அருகே பெண் குடிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சொல்லிடவே அப்பகுதியில் உள்ள மக்கள் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாக பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த நபரை போஸ்ட் கம்பத்தில் கட்டி வைத்த மக்கள் அடித்து உதைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
Advertisement