முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மதுரை: நிர்வாணமாக வீடியோ காலில் பேச்சு.! ஆபத்தாய் முடிந்த இன்ஸ்டா காதல்.!

06:43 PM Feb 22, 2024 IST | 1newsnationuser4
Advertisement

மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளார். அந்தப் பெண்ணுடன் நிர்வாணமாக வீடியோ காலில் பேசியதாகத் தெரிகிறது. அந்தப் பெண்ணுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, இருவரும் முன்பு பேசி இருந்த வீடியோ காலை பதிவு செய்து வைத்திருந்த இவர், அந்தப் பெண்ணை மிரட்டத் துவங்கி உள்ளார். அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த நபரை கைது செய்தனர்.

Advertisement

மதுரையில் உள்ள ஆழ்வாழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். அவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளார். நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் வீடியோ காலில் பேசியுள்ளனர்.

இந்த பழக்கம் நாளடைவில், அவர்கள் நிர்வாணமாக வீடியோ காலில் பேசுவதற்கு வழி வகுத்தது. காதல் கசந்தபின், இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் வரத் தொடங்கின. அந்தப் பெண் அருண்குமாரை விட்டு முழுவதுமாக விலக முற்பட்டபோது, அவர்கள் இருவரும் முன்பு பேசிய வீடியோ காலை பதிவு செய்து வைத்திருந்த அருண்குமார், அவற்றை காண்பித்து அந்த பெண்ணை மிரட்டத் துவங்கியுள்ளார்.

அதிர்ந்து போன அந்த பெண், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்தார். அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், அருண்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். பெண்கள் சமூக வலைத்தளங்களில் மற்றவர்களோடு பழகும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் என்று பலரும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

English summary: A man was arrested for threatening a woman with the recordings of their past nude video calls.

Read More: ‘Facebook’ காதலரை மணந்த பெண் 6 மாதத்தில் தற்கொலை.! ஆர்.டி.ஓ விசாரணை.!

Tags :
instagrammaduraipolice arrestvideo call
Advertisement
Next Article