For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இரவில் கொடூரம்: "70 வயது பாட்டியின் முனங்கள் சத்தம்.." 23 வயது இளைஞரின் வெறி செயல்.!

03:22 PM Jan 23, 2024 IST | 1newsnationuser7
இரவில் கொடூரம்   70 வயது பாட்டியின் முனங்கள் சத்தம்    23 வயது இளைஞரின் வெறி செயல்
Advertisement

மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மாவட்டத்தில் 70 வயது மூதாட்டி உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக அவரது பேரனை கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

மகாராஷ்டிரா மாநிலம் ஜவஹர் தாலுகாவை சேர்ந்த உம்பர்வாடி கிராமத்தில் தரம்வீர் வசி என்ற 23 வயது இளைஞர் வசித்து வருகிறார். இவர் தனது பாட்டியுடன் தங்கி இருக்கிறார். இந்நிலையில் திங்கள் கிழமை இரவு மது போதையில் இருந்த தரம்வீர் உணவு சாப்பிட்டிருக்கிறார் . அப்போது அவரது பாட்டி முனங்கி கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தரம்வீர் உருட்டு கட்டையால் பாட்டியின் தலையில் கொடூரமாக தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே பாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட தரம்வீரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Advertisement