For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆத்தி.! புயல் நிவாரண நிதியை கொடுக்காத கணவன்.! கத்தியால் குத்திய மனைவி.! அதிர்ச்சி சம்பவம்.!

01:42 PM Dec 21, 2023 IST | 1newsnationuser4
ஆத்தி   புயல் நிவாரண நிதியை கொடுக்காத கணவன்   கத்தியால் குத்திய மனைவி   அதிர்ச்சி சம்பவம்
Advertisement

சென்னை அருகே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகையை கொடுக்காததால் ஆத்திரமடைந்த மனைவி கணவரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட மனைவியிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement

சென்னை வியாசர்பாடி பகுதியில் சேர்ந்தவர் பண்பழகன். 51 வயதான இவர் சிவில் இன்ஜினியர் ஆக பணியாற்றி வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரது முதல் மனைவி இறந்த நிலையில் மகாலட்சுமி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து இருக்கிறார். கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

இந்நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களை தாக்கிய மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரண தொகையாக 6000 ரூபாய் வழங்கியது. இந்தத் தொகையை பண்பழகனும் வாங்கியிருக்கிறார். தனது கணவர் வாங்கிய நிவாரண தொகையை தன்னிடம் தருமாறு மகாலட்சுமி கேட்டிருக்கிறார். இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார் பண்பழகன்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி வீட்டிலிருந்த கத்தியை எடுத்து பண்பழகனின் வயிற்றில் குத்தி இருக்கிறார். கத்தியால் குத்தியதால் வலி தாங்க முடியாமல் அலறிய பண்பழகனின் அலறல் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பெயரில் மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் பண்பழகனிடம் புகாரை பெற்றுக் கொண்டு அவரது மனைவியை கைது செய்துள்ளனர்.

Tags :
Advertisement