For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிர்ச்சி சம்பவம்: '5' வயது சிறுவனின் பிறப்புறுப்பை அறுத்த தந்தை..!! தாய் பரபரப்பு புகார்.!

03:47 PM Feb 08, 2024 IST | 1newsnationuser7
அதிர்ச்சி சம்பவம்   5  வயது சிறுவனின் பிறப்புறுப்பை அறுத்த தந்தை     தாய் பரபரப்பு புகார்
Advertisement

பிரேசில் நாட்டைச் சார்ந்த சிறுவனின் பிறப்புறுப்பு வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் அளித்த புகாரின் பேரில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

பிரேசில் நாட்டின் கனின்டே நகரைச் சார்ந்த நபர் ஒருவர் தனது மனைவியின் முதல் கணவரின் குழந்தையான 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பை கத்தியால் வெட்டி இருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான் . குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்ந்து சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு நன்கொடை வசூலிக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் அவரின் கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Advertisement