For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

12 ஆண்டுகளுக்குப் பின் நடந்த கொடூரம்.! மகள் கழுத்தறுத்து படுகொலை.! தப்பியோடிய தந்தைக்கு வலைவீச்சு.!

12:07 PM Nov 30, 2023 IST | 1newsnationuser4
12 ஆண்டுகளுக்குப் பின் நடந்த கொடூரம்   மகள் கழுத்தறுத்து படுகொலை   தப்பியோடிய தந்தைக்கு வலைவீச்சு
Advertisement

ராஜஸ்தான் மாநிலத்தில் பெற்ற மகளையே கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய கொலையாளி தந்தையை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.

Advertisement

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிவ்லால் மேக்வால். இவர் தனது குடும்பத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 12 வருடங்களாக தனியாக வசித்து வருகிறார். இவரது மனைவி மற்றும் மகள் குஜராத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு மூத்த மகள் தான் காரணம் என அவர் மீது ஆத்திரத்தில் இருந்திருக்கிறார் ஷிவ்லால்.

இந்நிலையில் தங்களது சொந்த ஊரில் நடைபெற இருக்கும் திருமணத்திற்காக ஷிவ்லால் மனைவி மற்றும் மகள்கள் தங்களது சொந்த கிராமத்திற்கு திரும்பி இருக்கின்றனர். தனது மகள்களை பார்க்க வேண்டும் என்று கூறி அவர்களை தனிமையான ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் ஷிவ்லால். தனது மகள்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது மூத்த மகளை மட்டும் தனியாக அழைத்துச் சென்ற அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை கொடூரமாக அறுத்து கொலை செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தனது மகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து இருக்கிறார். இந்த சம்பவத்தை நேரில் கண்ட அவரது இளைய மகள் அலறித் துடிக்கவே அவரது சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய தந்தையை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags :
Advertisement