For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தாயின் சடலத்துடன் நிர்வாணமாக படுத்த மகன்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி உண்மை.!

04:34 PM Dec 15, 2023 IST | 1newsnationuser4
தாயின் சடலத்துடன் நிர்வாணமாக படுத்த மகன்   விசாரணையில் வெளியான அதிர்ச்சி உண்மை
Advertisement

அமெரிக்காவை சார்ந்த வாலிபர் தனது தாயை தலை துண்டித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபருக்கு மனநல பிரச்சனை இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

அமெரிக்காவின் ஓசன் சிட்டி நகரைச் சேர்ந்தவர் ஜெஃப்ரி சர்ஜெண்ட். காவல்துறையை போனில் தொடர்பு கொண்ட இவர் தனது தாயை கொலை செய்து விட்டதாகவும் தன்னை கைது செய்யும்படியும் தெரிவித்திருக்கிறார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் உடனடியாக இவர் கூறிய முகவரிக்கு விரைந்தனர்.

இவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது இவரது தாய் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். மேலும் தாயின் அருகே ஜெஃப்ரி சர்ஜெண்ட் நிர்வாணமாக படுத்து கிடந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது தாயின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்தியதில் எனக்கு மனநிலை பிரச்சனை இருப்பதாக தெரிவித்த இவர் தனது தாயின் கழுத்தை கத்தியால் அறுத்து அவரது தலையை துண்டித்ததாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவ சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது

Tags :
Advertisement