முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அடச்சீசீ..! ரயிலில் இளம் பெண் முகத்தில் 47 வயது நபர் செய்த அசிங்கம்.! காவல்துறை அதிரடி நடவடிக்கை.!

04:19 PM Jan 03, 2024 IST | 1newsnationuser7
Advertisement

கேரளாவில் இருந்து கோவாவிற்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் சக பயணி முன்பு 47 வயது நபர் செய்த காரியம் அனைவரிடத்திலும் அருவருப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து ரயில்வே போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த அருவருக்கத்தக்க சம்பவம் கேரளாவில் இருந்து கோவா நோக்கி சென்று கொண்டிருந்த பூர்ணா எக்ஸ்பிரஸ் ரயிலில் வைத்து நடைபெற்று இருக்கிறது. இன்று அதிகாலை இரயில் கர்நாடக மாநிலத்தில் சென்று கொண்டிருந்தபோது 47 வயது மதிக்கத்தக்க நபர் உறங்கிக் கொண்டிருந்த 22 வயது இளம் பெண்ணின் முன்பு நின்று சுய இன்பம் செய்திருக்கிறார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மற்றொரு பயணி இது தொடர்பாக ரயில்வே காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

இந்த புகாரை தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு வருகை புரிந்த ரயில்வே காவல்துறையை அதிகாரிகள் அவல செயலில் ஈடுபட்ட 47 வயது நபரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி பகுதியைச் சேர்ந்த தத்தாத்ரே சவான் என்று தெரிய வந்திருக்கிறது. மேலும் அந்த நபர் கேரள மாநிலம் கண்ணூரில் பணியாற்றி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர் கோவா ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். ஓடும் ரயிலில் இளம் பெண் முன்பு சக பயணி ஒருவர் ஆபாசமான முறையில் நடந்து கொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Crime Against WomanindiaKeralaPoorna Expresssexual abuse
Advertisement
Next Article