For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரூம் போட்டு உல்லாசம்..!! திருமணத்திற்கு முன்பே பிறந்த குழந்தை..!! கடைசியில் நடந்த சோகம்..!!

The incident of burying the child in a plastic cover when the child was born before marriage has caused shock.
02:48 PM Aug 17, 2024 IST | Chella
ரூம் போட்டு உல்லாசம்     திருமணத்திற்கு முன்பே பிறந்த குழந்தை     கடைசியில் நடந்த சோகம்
Advertisement

திருமணத்திற்கு முன்பே குழந்தை பிறந்த நிலையில், குழந்தையை பிளாஸ்டிக் கவரில் போட்டு புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் தாமஸ் ஜோசப் (24). இவரும், டோனா ஜோஜி (22) என்ற பெண்ணும் கல்லூரி நாட்களில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு குடும்பத்தினருமே சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த பெண் கர்ப்பமடைந்துள்ளார்.

இதனால் ஜோஜியும் ஜோசப்பும் மன அழுத்தத்தில் இருந்தனர். திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தை வெளிப்படுத்தினால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று வேதனயடைந்தனர். இதனால் கருத்தரிப்பை வெளியுலகிற்கு தெரியாமல் மறைத்து விட்டனர். ஜோஜி ஒரு கட்டத்தில் கருக்கலைப்பு செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இருப்பினும், அதற்குள் நேரம் கடந்துவிட்டது. ஜோஜி அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்தார். இதன் மூலம் தனது உடலில் ஏற்படும் மாற்றங்களை குடும்பத்தினருக்கு தெரியாமல் சமாளித்து வந்திருக்கிறார்.

இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி காலை பனவள்ளி ஆனைமுடிச்சிராவில் ஜோஜிக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, ஜோஜி உடனடியாக குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டினார். ஆனால், அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. மறுபுறம், குழந்தை அழாததால், அருகில் உள்ள குடும்பத்தினருக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்ததே தெரியவில்லை. டோனோ ஜோஜியும் மிகுந்த சோர்வால் மயங்கி விழுந்துள்ளார்.

வெகுநேரம் கழித்து கண்விழித்த பார்த்த அவர், குழந்தை அழாததால் இறந்து விட்டதாக நினைத்து தாமஸ் ஜோசப்பிடம் குழந்தை பிறந்த செய்தியை கூறி, குழந்தையை வேறு எங்காவது கொண்டு செல்லும்படி கூறியுள்ளார். இதற்காக ஜோஜி குழந்தையை பிளாஸ்டிக் கவரில் போட்டு யாருக்கும் தெரியாமல் படிக்கட்டுக்கு அடியில் மறைத்து வைத்திருக்கிறார். ஜோசப் தனது நண்பர் அசோக்குடன் (24) ஜோஜியின் வீட்டுக்குச் சென்று குழந்தையை பிளாஸ்டிக் பையில் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

2 நாட்களுக்குப் பிறகு, ஜோஜிக்கு பயங்கர வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஜோஜியின் உடல் மாறுதல்களும், அவரது நடத்தையும் மருத்துவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், 'உன் பெற்றோர் வந்தால்தான் சிகிச்சை அளிக்கப்படும்' என மருத்துவர்கள் கூறியதால், ஜோஜி உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்த மருத்துவமனை நிர்வாகம், சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அப்போது, ​​தாமஸ் ஜோசப்பிடம் குழந்தையை அரசு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் (அம்மா டின்டில் திட்டத்தின் கீழ்) ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டதாக ஜோஜி தெரிவித்தார். ஜோசப்பிடம் விசாரணை நடத்தியபோது, குழந்தை இறந்துவிட்டதாக கூறி ஆளில்லாத பகுதியில் புதைத்துள்ளார். அடுத்தடுத்து வெளியாகும் இந்த திடுக்கிடும் உண்மைகள் காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பச்சிளம் குழந்தையை வெறிச்சோடிய பகுதியில் புதைத்துள்ளதால், இது கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ஜோசப் மற்றும் அவரது நண்பர் அசோக் ஆகியோரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஜோஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Read More : அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்..!! ஊதிய உயர்வு, இழப்பீடு தொகை உயர்வு..!! வெளியான சூப்பர் அறிவிப்புகள்..!!

Tags :
Advertisement