முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பரபரப்பு...! சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவை 20-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு...!

Mahavishnu was ordered to be kept in jail till the 20th
06:39 AM Sep 08, 2024 IST | Vignesh
Advertisement

மகாவிஷ்ணுவை 20-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு, மாணவர்கள் மத்தியில் பேசிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ், “இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் அந்த நடவடிக்கை அமையும் என்று கூறியிருந்தார்.

மேலும் மகாவிஷ்ணுவுக்கு சொந்தமான பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகங்களிலும் போலீஸார் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதனையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டு காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று சென்னை திரும்பியதும் அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

தற்போது மகாவிஷ்ணுவை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவர் ஜூன் 20ஆம் தேதி வரை நீதிமன்றம் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாவிஷ்ணுவிற்கு ஆதரவாக பாஜக உள்ளிட்ட இந்து இயக்கங்கள் தங்களது ஆதரவு குரல்களை கொடுத்து வருகின்றனர். அதேபோல திமுக கூட்டணியில் உள்ள கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Tags :
arrestcourtjailMaha Vishnu
Advertisement
Next Article