For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பகீர்..!! கல்லூரி முடிந்து வீடு திரும்பிய நர்சிங் மாணவி பலாத்காரம்..!! அதிர வைக்கும் பின்னணி..!!

Maharashtra: Auto Driver Spikes Nursing Student's Water On Way Home In Ratnagiri, Rapes Her
10:15 AM Aug 27, 2024 IST | Mari Thangam
பகீர்     கல்லூரி முடிந்து வீடு திரும்பிய நர்சிங் மாணவி பலாத்காரம்     அதிர வைக்கும் பின்னணி
Advertisement

மகாராஷ்டிரால் கல்லூரி முடிந்து வீடு திரும்பிய நர்சிங் மாணவிக்கு போதைப் பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினபுரி நகரில் நர்சிங் பயிலும் 19 வயது மாணவி கல்லூரி முடிந்து வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது மாணவிக்கு போதை பொருள் கலந்த தண்ணீரை ஆட்டோ ஓட்டுநர் கொடுத்துள்ளார். தண்ணீர் என நினைத்து குடிந்த மாணவி சிறிது நேரத்தில் சுயநினைவை இழந்தார். பின்னர், மாணவியை காட்டுப்பகுதிக்க்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

போலீஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, நர்சிங் மாணவி தனது கல்லூரியில் இருந்து வீட்டிற்கு செல்ல ஆட்டோவை முன்பதிவு செய்துள்ளார். தண்ணீரில் போதை பொருள் கலந்து கொடுத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சுயநினைவு திரும்பியதும் பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறோம். சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், தலைமறைவாக உள்ள ஆட்டோ ஓட்டுநரை தேடும் பணி நடைபெற்று வருவதாக தெவித்தார். இந்த சம்பவத்தை கண்டித்து ரத்தினகிரியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறது. இந்த சம்பவம் மாநிலத்திலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more ; இந்தியர்களுக்கு அதிர்ச்சி!. இனி கனடாவில் வேலை கிடைப்பது கடினம்!. ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி!

Tags :
Advertisement