For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காதலனை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலி.... காதலன் வாக்குமூலத்தால் அதிர்ச்சி.....

10:05 AM May 16, 2024 IST | shyamala
காதலனை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலி     காதலன் வாக்குமூலத்தால் அதிர்ச்சி
Advertisement

மயிலாடுதுறையில் காதலனை காதலி பெட்ரோல் ஊற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவர், கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். அரசு மகளிர் கல்லூரியில் படித்து வந்த சிந்துஜா, இருவரும் கல்லூரிக்குச் செல்லும் போது பேருந்து நிறுத்தத்தில் அறிமுகமாகினர். பின்பு நாளடைவில் காதலர்களாக மாறிய இருவரும் 2 ஆண்டுகளாக தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

Advertisement

இந்த நிலையில், ஆகாஷ் இன்னொரு பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளார். இதையடுத்து சிந்துஜா, அந்த பெண்ணுடன் பேசக் கூடாது என்று ஆகாஷை எச்சரித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆகாஷும், சிந்துஜாவும் கடற்கரைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஒன்றாக திரும்பியுள்ளனர். அப்போது, ஆகாஷிடம், இனி அந்த பெண்ணைப் பார்க்கவோ, பேசவோ கூடாது என்று கூறியுள்ளார். அதற்கு ஆகாஷ் தான் அந்த பெண்ணிடம் நட்பாக தான் பழகி வருவதாக தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சிந்துஜா,  மறைத்து வைத்திருந்த பெட்ரோலை காதலன் ஆகாஷ் மீதும், தன் மீதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.

இருசக்கர வாகனத்தில் எரிந்தபடியே சென்ற இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், படுகாயமடைந்த ஆகாஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, உயிருடன் இருந்த போது ஆகாஷ் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிந்துஜாவிடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுக்கு சங்கருக்கு சரியான பதிலடி..!! பெண் காவலர்களை வைத்தே பாடம் புகட்டும் தமிழ்நாடு போலீஸ்..!!

Advertisement