For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Love | 'ரூ.5 லட்சம் செலவு பண்ணிருக்கேன்'..!! 'இப்போ இன்னொருத்தன் கூட சுத்திட்டு இருக்கா'..!! கதறும் காதலன்..!!

05:15 PM Feb 21, 2024 IST | 1newsnationuser6
love    ரூ 5 லட்சம் செலவு பண்ணிருக்கேன்       இப்போ இன்னொருத்தன் கூட சுத்திட்டு இருக்கா      கதறும் காதலன்
Advertisement

Love | கர்நாடகா மாநிலம் மடிகேரி சோமவார்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் குஷி. இவர் லேப் டெக்னீசியன் பயிற்சிக்காக ராய்ச்சூர் வந்தார். அங்கு ஒரு தனியார் மருத்துவமனையில் குஷி பணியில் சேர்ந்தார். அதே மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றுபவர் விகாஸ் குமார். இவர் தான் தன் காதலி ஏமாற்றி விட்டதாகவும், அவரை மீட்டுத் தருமாறு மார்கெட் யார்டு காவல் நிலையத்தை அணுகியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து விகாஸ் குமார் கூறுகையில், "நானும், குஷியும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்தோம். இந்நிலையில், பயிற்சிக்காக வேறு ஒரு மருத்துவமனையில் குஷியை சேர்த்து விட்டேன். அப்போது அங்கு ஒரு இளைஞருடன் குஷிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்து நான் கேட்ட போது, நண்பர் என்றாள். ஆனால், அவர்கள் இருவரையும் ஒரு பூங்காவில் கையும், களவுமாக பிடித்த போது மனம் உடைந்து போனேன். அந்த இளைஞரை காதலிப்பதாக குஷி அப்போது சொன்னார்.

அவளுக்கான நான் இதுவரை 5 லட்ச ரூபாய்க்கு மேல் போக்குவரத்திற்கு மட்டும் செலவு செய்துள்ளேன். அவள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது. தூக்க மாத்திரை சாப்பிட்டு 3 முறை தற்கொலைக்கு முயன்றேன். அவள் அந்த இளைஞரை திருமணம் செய்து விட்டு, திரும்பி வந்தாலும் நான் அவளுடன் வாழத் தயாராக இருக்கிறேன். ஆனால், என்னை அவள் நம்பவில்லை. அவளிடமிருந்து எனக்கு இப்போது மிரட்டல் வந்துள்ளது" என்றார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : Guava | தினமும் 2 கொய்யாப் பழம் போதும்.!! உடலில் நடக்கும் அதிசயத்தை நீங்களே பார்ப்பீங்க..!!

Advertisement