For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆன்லைன் டிரேடிங்கில் நஷ்டம்..! நிறைமாத கர்ப்பிணி மனைவி..! கணவன் எடுத்த விபரீத முடிவு..!

03:18 PM Apr 20, 2024 IST | Kathir
ஆன்லைன் டிரேடிங்கில் நஷ்டம்    நிறைமாத கர்ப்பிணி மனைவி    கணவன் எடுத்த விபரீத முடிவு
Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பேகேப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(27), இவருக்கு சந்தியா என்ற மாணவி உள்ளார். காதலித்து வந்த விஜயகுமார் மற்றும் சந்தியா கடந்தாண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர்

Advertisement

புதுமண தம்பதியாக சுற்றிவந்த நிலையில் சந்தியா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இன்னும் சில தினங்களில் பிரசவம் ஏற்படலாம் என மருத்துவர்கள் குறிப்பிட்டிருந்தனர். இதனால் இரு குடும்பங்களும் புதுவரவை வரவேற்க ஆவலாய் இருந்துள்ளனர். ஆண்ளை அவர்கள் எதிர்பாராத சம்பவம் ஒன்று அரங்கேறியது.

தனியார் நிறுவனத்தில் விஜயகுமார் வேலை பார்த்து வந்தநிலையில், ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்து பல லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளார். நேற்றிரவு கணவன்,மனைவி இருவரும் சாப்பிட்டு தூங்க சென்றநிலையில், இன்று காலை 11 மணி ஆனபோதும் படுக்கையறை கதவு திறக்கப்படாத நிலையில் சந்தியாவின் தாயார் படுக்கையறை கதவை திறந்தபோது நிறைமாத கர்ப்பிணியான மகளும், மருமகனும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்ப்படுத்தி உள்ளது..

இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிப்காட் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் டிரேடிங்கில் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக நிறைமாத கர்ப்பிணி காதல் மனைவியுடன் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் விஜயகுமார்.

Tags :
Advertisement