முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

திரைப்படங்களில் பெண்களை கொல்லும் லோகேஷ்..!! உளவியல் பரிசோதனை தேவை..!! உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு..!!

02:33 PM Jan 04, 2024 IST | 1newsnationuser6
Advertisement

மதுரையை சேர்ந்த ராஜா முருகன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் லியோ திரைப்படத்தை அண்மையில் பார்த்ததாகவும், அது வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, லோகேஷ் கனகராஜின் திரைப்படங்களில் பெண்களைக் கொல்வது தொடர்வதால், அவருக்கும் அந்த மனநோய் இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக மனுதாரர் தெரிவித்திருக்கிறார்.

Advertisement

எனவே, லோகேஷ் கனகராஜிற்கு உளவியல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். லியோ படத்தால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு தனக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் மனுதாரர் வலியுறுத்தியுள்ளார். மேலும், வன்முறை மிகுந்த லியோ படத்தை ஊடகங்களில் ஒளிபரப்ப தடை செய்ய தணிக்கை குழுவிற்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ண குமார் மற்றும் விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் யாரும் ஆஜராகாததால், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு உளவியல் பரிசோதனை செய்ய உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
உயர்நீதிமன்ற கிளைஉளவியல் பரிசோதனைநடிகர் விஜய்லியோலோகேஷ் கனகராஜ்வன்முறை
Advertisement
Next Article