For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Lok Sabha | வாக்கு சேகரிக்க வந்த தமிழச்சி தங்கபாண்டியனை விரட்டியடித்த பொதுமக்கள்..!! ஏன் தெரியுமா..?

10:55 AM Mar 27, 2024 IST | Chella
lok sabha   வாக்கு சேகரிக்க வந்த தமிழச்சி தங்கபாண்டியனை விரட்டியடித்த பொதுமக்கள்     ஏன் தெரியுமா
Advertisement

தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அத்தொகுதிக்குட்பட்ட திருவல்லிக்கேணி மயிலாப்பூர் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சென்றபோது, பொதுமக்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய விடாமல், திருப்பி அனுப்பிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

குறிப்பாக, பாரதிதாசன் நகர் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சேதம் அடைந்திருப்பதாகவும், நீண்ட நாட்களாக சீர் செய்யக்கோரி கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய பொதுமக்கள், தமிழச்சி தங்கபாண்டியனின் பிரச்சார வாகனத்தை வழிமறித்து வாக்குவாதம் செய்தனர்.

இதனையடுத்து, தனது பிரச்சார வாகனத்துடன் தமிழச்சி தங்கபாண்டியன் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்றார். அதேபோன்று மயிலாப்பூர் பகுதியிலும் அவரை பிரச்சாரம் செய்யவிடாமல், பொதுமக்கள் தடுத்து நிறுத்தி கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Read More : ’இதுக்கு ஒரு முடிவே இல்லையா’..? மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! இன்னைக்கு எவ்வளவு தெரியுமா..?

Advertisement