For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Lok Sabha | திடீரென மேடையிலேயே கண்ணீர் விட்டு கதறிய பிரேமலதா..!! என்ன காரணம்..?

08:41 AM Apr 01, 2024 IST | Chella
lok sabha   திடீரென மேடையிலேயே கண்ணீர் விட்டு கதறிய பிரேமலதா     என்ன காரணம்
Advertisement

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் குமரகுருவுக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாணாபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். மேடையில் அதிமுக வேட்பாளர் குமரகுரு, தேமுதிக பற்றியும் விஜயகாந்த் பற்றியும் பேசும்போது நா தழுதழுத்து பேசினார். அதேபோல் அவர் பேசியதை மேடையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் குமரகுரு பேச பேச கண்ணீர் விட்டு அழுதார்.

Advertisement

அதேபோல வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து பேசும்போது பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் குறித்தும், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி குறித்தும் பேசுகையில் கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் தொண்டர்களிடம் நமது கூட்டணி கட்சியின் அதிமுக வேட்பாளர் குமரகுருவிற்கு வாக்களிக்க வேண்டும் என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட தேமுதிக அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கடந்த 2011 சட்டமன்ற தொகுதியில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டிட்ட கேப்டன் விஜயகாந்த், மாபெரும் வெற்றி பெற்றார். இந்த தொகுதியின் மக்களுக்கும், கேப்டனுக்கும் நெருக்கமான உறவு உள்ளது.

Read More : செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா..? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..!!

Advertisement