For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

லைவில் தற்கொலை முயற்சி..!! பெண்கள் மீது வன்மம்..!! பிரபல யூடியூபர் பிரியாணி மேன் அதிரடி கைது..!!

YouTuber Biryani Man Abhishek Rabi has been arrested by Chennai Cyber ​​Crime Police today.
09:38 AM Jul 30, 2024 IST | Chella
லைவில் தற்கொலை முயற்சி     பெண்கள் மீது வன்மம்     பிரபல யூடியூபர் பிரியாணி மேன் அதிரடி கைது
Advertisement

யூடியூபர் பிரியாணி மேன் அபிஷேக் ரபி இன்று சென்னை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

பிரியாணி மேன் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருபவர் அபிஷேக் ரபி. யூடியூபர்கள் எளிதில் பிரபலமடைவதற்காக ஏற்கனவே பிரபலமாக இருக்கும் யூடியூபர்களை அவதூறாக பேசி இவர்கள் பிரபலமடைவது. இதனால் இவர்களது ஆதரவாளர்களும் மோதிக் கொள்கிறார்கள். அந்த வகையில், பிரபல யூடியூபரான இர்ஃபானை தனது வீடியோவில் பிரியாணி மேன் அவதூறாக பேசி வந்ததாக தெரிகிறது.

கடந்தாண்டு இர்பானின் கார் விபத்தில் சிக்கியதில் மூதாட்டி ஒருவர் மரணமடைந்தார். அப்போது அந்த காரை இர்பான் ஓட்டவில்லை என்றும் அவருடைய உறவினர்தான் ஓட்டினார் என்றும் கூறப்பட்டது. அதேபோல இர்பானின் மனைவி கர்ப்பமாக இருந்த போது இர்பான் துபாயில் தனது குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து அதை யூடியூபில் வெளியிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால், இந்த விஷயத்தையும் கார் விபத்து விஷயத்தையும் கையில் எடுத்த பிரியாணி மேன், கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு இர்பானும் ஆதாரங்களுடன் விளக்கம் அளித்திருந்தார். அது போல் டெய்லர் அக்கா என்ற யூடியூப் சேனலில் டெய்லரிங் குறித்த பதிவுகளை பெண் ஒருவர் வெளியிட்டு வருகிறார். இவர் பிளவுஸ் தைத்து கொடுப்பதை பிரியாணி மேன் ஆபாசமாக வீடியோ வெளியிட்டிருந்தார். அதேபோல், எப்போதும் பெண்களை தரக்குறைவாக விமர்சிப்பது, செம்மொழி பூங்கா குறித்து ஆபாசமாக பேசியிருந்தார்.

இதனால் பிரியாணி மேனை பலர் விமர்சித்திருந்தார்கள். இதையடுத்து, அவர் யூடியூப்பில் நேரலையில் தற்கொலை செய்து கொள்வது போல் ஒரு வீடியோவை போட்டு தனது தற்கொலைக்கு காரணம் ஜேசன்தான் என சொல்லிக் கொண்டே தற்கொலைக்கு முயன்றார். அப்போது நெட்டிசன்கள் அவரது தாயை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லியதும், அவர் உடனே சென்று காப்பாற்றியுள்ளார். சுமார் 3 மணி நேரமாக லைவில் அவர் இது போல் செய்து வந்ததா,ல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், பிரியாணி மேன் அபிஷேக் ரபியை சென்னை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். அவர் மீது பெண் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு பிரிவு, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Read More : வசூலிலும் பட்டையை கிளப்பும் ராயன்..!! ரூ.100 கோடி..!! உற்சாகத்தில் படக்குழு..!!

Tags :
Advertisement