For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'காலம் வரும்வரை காத்திருப்போம்..' சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

12:00 PM May 19, 2024 IST | Mari Thangam
 காலம் வரும்வரை காத்திருப்போம்    சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு
Advertisement

முடக்க முயலும் நெருக்கடிகளாலும், மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாகவும் சவுக்கு ஊடகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அதன் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பெண் காவல்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு வருகிறது. இந்நிலையில் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், “அன்புக்குரிய தமிழக மக்களுக்கும், சவுக்கு ஊடகத்தை பின்தொடர்பவர்களுக்கும் வணக்கம்! இதுவரை உங்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருந்த சவுக்கு ஊடகம் மற்றும் அதன் நிறுவனரான சவுக்கு சங்கரை முடக்கும் விதமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை நன்கு அறிவீர்கள்.

சவுக்கு என்பது ஒரு குடும்பம். அதில் நீங்களும் ஓர் அங்கம். உங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, சவுக்கு ஊடகத்தின் செயல்பாடுகளை இன்றிலிருந்து (நேற்று) தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். நீதித்துறையின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. காலம் வரும் வரை காத்திருப்போம். நன்றி சவுக்கு ஊடகம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement