முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’அந்த சாணியில் நாம் கல் எறிய வேண்டாம்’..!! பயில்வானை வெளுத்து வாங்கிய வெங்கடேஷ் பட்..!!

Bailwan Ranganathan posted a video saying bad things about me. Everyone is insulting him in the comments. Please don't post insulting messages.
01:19 PM Oct 05, 2024 IST | Chella
Advertisement

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 4 சீசன்களாக நடுவராக இருந்தவர் தான் வெங்கடேஷ் பட். அந்த நிகழ்ச்சி நடத்தும் நிறுவனம் டிவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், வெங்கடேஷ் பட்டும் விலகினார். அதோடு, சில கோமாளிகளும் விலகினர். அதன் பிறகு, அதே நிறுவனம் மூலமாக சன் டிவியில் டாப் குக் டூப் குக் என்ற ஷோவை வெங்கடேஷ் பட்டை வைத்து ஆரம்பித்தது. அது சமீபத்தில் தான் நிறைவு பெற்றது.

Advertisement

இந்நிலையில், நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் வெங்கடேஷ் பட் பற்றி அவதூறாக பேசியுள்ளார். அவர் பல கோடி சம்பளமாக கேட்டார் என்றும், அதற்கு விஜய் டிவி மறுத்ததால் சன் டிவிக்கு சென்றுவிட்டார் என்றும் கூறியிருந்தார். தற்போது, இதற்கு பதிலடி கொடுத்து வெங்கட் பட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “பயில்வான் ரங்கநாதன் என்னை பற்றி தரக்குறைவாக பேசி வீடியோ போட்டார். அவரை எல்லோரும் கமெண்டில் திட்டுகிறீர்கள். தயவு செய்து திட்டி மெசேஜ் போடாதீங்க. அவர் நிலைமை என்ன என்பது தெரியவில்லை. பாவம் அவர் பணத்திற்காக பண்ணுறாரா, மனநிலை சரியில்லையா என தெரியவில்லை. அவர் ஏதோ பொழப்புக்காக செய்கிறார். அதை பண்ணிட்டு போகட்டும்.

அந்த சாணியில் நாம் கல் எறிந்து, அந்த சாணி நம் முகத்தில் வீச வேண்டாம் என பார்க்கிறேன். உண்மை இல்லாமல் செய்யும் பல விஷயங்கள் சோசியல் மீடியாவில் வலம் வந்துகொண்டிருக்கிறது. இன்று என்னை பற்றி வந்துள்ளது. பொதுவாழ்க்கையில் இது ரொம்ப சாதாரணம்” என்று வெங்கடேஷ் பட் கூறியிருக்கிறார்.

Read More : காதலன் நடத்தையில் சந்தேகம்..!! திருமணத்திற்கு ‘No’ சொன்ன காதலி..!! கழுத்தை அறுத்த அதிர்ச்சி சம்பவம்..!!

Tags :
குக் வித் கோமாளிடாப் குக் டூப் குக்பயில்வான்வெங்கடேஷ் பட்
Advertisement
Next Article