For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாகிஸ்தானிற்குள் புகுந்து தீவிரவாதிகளை கொல்வோம்!... ராஜ்நாத் சிங் பகிரங்க எச்சரிக்கை!

06:50 AM Apr 06, 2024 IST | Kokila
பாகிஸ்தானிற்குள் புகுந்து தீவிரவாதிகளை கொல்வோம்     ராஜ்நாத் சிங் பகிரங்க எச்சரிக்கை
Advertisement

Rajnath Singh: இந்தியாவில் நுழைந்து தாக்குதல் நடத்திவிட்டு பாகிஸ்தானிற்குள் தப்பிச்செல்லும் தீவிரவாதிகளை அந்நாட்டிற்குள் புகுந்து இந்தியா கொல்லும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

தனியார் செய்தி தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியில் பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானில் ஒளிந்திருக்கும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை, இந்திய உளவாளிகள் குறிவைத்து கொல்வதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அந்த செய்தியை மறுத்த இந்திய அரசு, நாளிதழுக்கு கண்டனமும் தெரிவித்தது.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் கொடுத்துவிட்டு எவரும் தப்பிச் செல்ல முடியாது என தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகள் பாகிஸ்தான் தப்பிச் சென்றால் பாகிஸ்தானுக்கே சென்று அவர்களை அழிப்போம் எனவும் தெரிவித்தார். இந்தியா தனது அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணவே விரும்புவதாகத் தெரிவித்த ராஜ்நாத் சிங், மற்ற நாடுகளின் எல்லைகளை ஒரு இஞ்ச் அளவுக்குகூட இந்தியா ஆக்கிரமித்தது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Readmore: அதிர்ச்சி!… இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்!… அலறிய மக்கள்!

Advertisement