For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழகத்தை ரவுண்டு கட்டும் தேசிய தலைவர்கள்!… மோடியை தொடர்ந்து ராகுல்!… நெல்லையில் இன்று பிரசாரம்!

05:20 AM Apr 12, 2024 IST | Kokila
தமிழகத்தை ரவுண்டு கட்டும் தேசிய தலைவர்கள் … மோடியை தொடர்ந்து ராகுல் … நெல்லையில் இன்று பிரசாரம்
Advertisement

Rahul gandhi: மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி இன்று தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

Advertisement

மக்களவை தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் அனல் பறக்கிறது. பிரதமர் மோடி ஏற்கனவே தமிழ்நாட்டில் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். மத்திய அமைச்சர் அமித்ஷாவும் இன்று தமிழகத்தில் சூறாவளி பிரசாரம் செய்கிறார்.

இதேபோல மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இன்று தமிழ்நாட்டில் பிரசாரம் செய்கிறார். திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் தனியார் பள்ளி வளாக மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி, தென்காசி திமுக வேட்பாளர் ராணி ஶ்ரீகுமார் ஆகியோரை ஆதரித்து ராகுல் காந்தி பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக நெல்லையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கோவையில் இன்றுமாலை முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரசாரம் செய்கிறார். கோவை எல் அண்ட் டி பைபாஸ் செட்டிபாளையம் அருகே பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. கோவை திமுக வேட்பாளர் கணபதி, பொள்ளாச்சி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி உள்ளிட்டோரை ஆதரித்து இரு தலைவர்களும் பிரசாரம் செய்கின்றனர். முன்னதாக பிரதமர் மோடி கோவை மேட்டுப்பாளையத்தில் பிரசாரம் செய்தார். அதற்கு முன்னதாக சென்னை ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement