For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆண்களே.! இந்த 4 ராசிக்கார பெண்களிடம், அந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமா இருங்க.!?

07:03 AM Jan 29, 2024 IST | 1newsnationuser5
ஆண்களே   இந்த 4 ராசிக்கார பெண்களிடம்  அந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமா இருங்க
Advertisement

இந்து தர்ம ஜோதிடத்தின்படி 12 ராசிக்காரர்களும் வெவ்வேறு குணங்களையும், ஆளுமை பண்புகளையும் கொண்டுள்ளனர். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் குணங்கள் மற்றும் ஆளுமை பண்புகளை பொறுத்து காதல், திருமண வாழ்க்கை போன்றவை அமையும். ஒரு சிலருக்கு வாழ்வில் காதல் என்பதே இல்லாமலும் போகும்.

Advertisement

குறிப்பாக ஒருவரிடம் அதிகமாக குழைந்து பேசுவது, தானாக சென்று பேசுவது, கடலை போடுவது போன்ற குணநலன்கள் ஆணுக்கே உரித்தானது என்று பலர் கருதி வருகின்றனர். ஆனால் ஒரு சில ராசியுடைய பெண்களும் இதை செய்து வருகின்றனர் என்று ஜோதிட சாஸ்திரம் கூறி வருகிறது. என்னென்ன ராசிக்கார பெண்கள் ஆண்களிடம் கடலை போடுவார்கள் என்பதை குறித்து பார்க்கலாம்?

மேஷம்: தைரியமும், சாகச குணநலன்களும் ஆளுமை பண்பாக கொண்டுள்ள மேஷ ராசிக்கார பெண்கள், எப்போதும் ஆண்களிடம் கடலை போடுவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். ஒரு சில பெண்களுக்கு முதலில் யார் பேசுவது என்று தயக்கமாக இருக்கும். ஆனால் மேஷம் ராசிக்கார பெண்கள் அப்படி இல்லை. தானாகவே சென்று தைரியமாக ஆண்களிடம் பேசி கடலை போடுவார்கள்.

சிம்மம்: கவர்ச்சியாகவும், நாட்டையே ஆளும் திறமையையும் கொண்ட சிம்ம ராசிக்கார பெண்கள், இயற்கையாகவே ஆண்களிடம் கொஞ்சி பேசி அன்பு வலையில் சிக்க வைப்பதில் திறமையானவர்கள். சிம்ம ராசிக்கான பெண்களுக்கு ஒரு ஆணை நீடித்த உறவில் எப்படி நிலைத்து நிற்க வைப்பது என்பது தெளிவாகத் தெரியும்.

துலாம்: பேசியே மயக்கிவிடும் பண்புகளைக் கொண்டவர்கள் தான் துலாம் ராசிக்கார பெண்கள். காதலுக்கும், கருணைக்கும் இடையிலான வித்தியாசத்தை தெளிவாக புரிந்து வைத்துக்கொண்டு ஆண்களிடம் பேசுவதில் வல்லவர்கள். ஒரு கூட்டத்தில் இருக்கும்போது துலாம் ராசிக்கார பெண்களின் கேலியான பேச்சும், விவாதமும் ஆண்களை வெகுவாக கவர்கிறது.

மீனம்: மீன ராசிக்கார பெண்கள் ஆண்களிடம் கடலை போடுவது போல் பேச ஆரம்பித்து அவர்களை தன் பக்கம் ஈர்க்கும் வல்லமை கொண்டவர்கள். மீன ராசிக்கார பெண்கள் கவிதை திறன் மற்றும் காதல் பேச்சு ஆண்களை தன் பக்கம் ஈர்க்கும் விதமாகவே இருக்கும்.

எனவே ஆண்கள் இந்த நான்கு ராசிக்கார பெண்களிடமும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதேநேரம் இந்த நான்கு ராசிக்கார பெண்கள் தங்கள் காதலியாகவோ, மனைவியாகவோ வரும்போது அளவுக்கு அதிகமாக காதலை கொடுப்பார்கள். அப்படிப்பட்ட ஆண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள் என்பது குறித்து ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags :
Advertisement