For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

டேனியல் பாலாஜியின் கண் தானம்!… இன்று உடல் நல்லடக்கம்!… மரணத்தை முன்பே அறிந்தாரா?... கல்யாணம் குறித்த உருக்கமான பேச்சு!

07:48 AM Mar 30, 2024 IST | Kokila
டேனியல் பாலாஜியின் கண் தானம் … இன்று உடல் நல்லடக்கம் … மரணத்தை முன்பே அறிந்தாரா     கல்யாணம் குறித்த உருக்கமான பேச்சு
Advertisement

வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, பொல்லாதவன், வடசென்னை உள்ளிட்ட பல்வேறு படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்த பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார்.வீட்டில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் டேனியல் பாலாஜி காலமானார். அவருக்கு வயது 48. அவரது உடல் புரசைவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அவரது மறைவு செய்தி தமிழ் திரையுலகிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும், அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், மறைந்த டேனியல் பாலாஜியின் கண்கள் இன்று தானமாக பெறப்படுகிறது.

Advertisement

மறைந்த நடிகர் முரளியின் சகோதரரான டேனியல் பாலாஜி, திரைப்பட துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், சித்தி தொடரில் டேனியல் கதாபாத்திரத்தில் நடித்தது, அவருக்குப் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. ஒரு நடிகராக மட்டுமல்லாமல், இவரது குரலுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த அளவிற்கு வில்லத்தனத்திற்கு பெயர் பெற்ற பாலாஜி, மலையாளத்தில் மோகன் லால், மம்முட்டி உள்ளிட்டோருக்கும் வில்லனாக நடித்துள்ளார். இவரது கடைசி படம் அறிவழகன். நிறைய வாய்ப்புகள் வந்தபோதும், முக்கியமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்த பாலாஜி, 48 வயதில் 42 படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு பக்தியுள்ளவர் என்றும் நம்பப்படுகிறது. அந்தவகையில், இவர் ஆவடியில் ஒரு கோவில் கட்டுவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், தனது திருமணம் குறித்த டேனியல் பாலாஜியின் உருக்கமான பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், தனக்கு பல இடங்களில் என்னுடைய அம்மா பெண் பார்த்தாங்க, ஆனால் ஜாதகம் எதற்குமே செட் ஆகல. ஜாதகம் செட் ஆனால், அந்த பெண்ணிற்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் ஆகி விடும். 25 வயசுலையே புரிஞ்சுகிட்டேன். நமக்கு இந்த கல்யாணம் எல்லாம் செட் ஆகாதுனு உருக்கமாக பேசியிருந்தார். இளம் வயதிலேயே தனது உயிர் பிரிந்துவிடும் என்பதை அறிந்தே திருமணம் செய்யாமல் விட்டுவிட்டாரா என்று பாலாஜியின் உறவினர்கள் உருக்கமுடன் உள்ளனர்.

Tags :
Advertisement