For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Breaking...! கேரளாவில் 3 இடங்களில் நிலச்சரிவு... 100-க்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக தகவல்...!

Landslides at 3 places in Kerala... More than 100 people are reported to be trapped
06:58 AM Jul 30, 2024 IST | Vignesh
breaking     கேரளாவில் 3 இடங்களில் நிலச்சரிவு    100 க்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக தகவல்
Advertisement

கேரளா மாநிலம் வயநாட்டில் வெளுத்து வாங்கும் கனமழை - மேப்பாடி, சூரல்மலை, முண்டகை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. 3 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி அருகே இன்று அதிகாலை பல மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது, இந்த நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிக்கு தீயணைப்பு மற்றும் NDRF குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (KSDMA) தெரிவித்துள்ளது. மேலும் NDRF குழு வயநாடு விரைந்துள்ளது.

கூடுதலாக, கண்ணூர் பாதுகாப்புப் படையில் இருந்து இரண்டு குழுக்கள் மீட்புப் பணிகளில் உதவுவதற்காக வயநாட்டிற்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டதாக மாநில பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement