முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரூ.1,000 உரிமைத்தொகை..!! வெளியான செம குட் நியூஸ்..!! பெண்களே நாளைக்கு வங்கிக் கணக்கை செக் பண்ணுங்க..!!

1 rupee will be sent tomorrow to check to make sure the money goes into the bank account.
06:37 PM Jul 13, 2024 IST | Chella
Advertisement

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.13 கோடி மகளிர் மாதந்தோறும் ரூ.1000 பெறும் நிலையில், இத்திட்டத்தில் 1.48 லட்சம் மகளிருக்கு ஜூலை 15 முதல் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் பணம் செல்வதை உறுதி செய்ய நாளை (ஜூலை 14) 1 ரூபாய் அனுப்பி சோதனை செய்யப்பட உள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதாவது மேலும் 1.48 லட்சம் பேருக்கு பணம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு ரூ. 1000 ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூடுதல் பெண்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளது. தற்போது புதிதாக விண்ணப்பம் செய்யபவர்கள், ஏற்கனவே விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவர்கள் இதில் இணையலாம்.

அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் மனைவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். முன்பு இவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை இருந்தது. மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கத்தில் புதிய பயனாளிகளுக்கு விண்ணப்பம் செய்ய இன்னும் 30 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

இந்நிலையில்தான் உரிமை தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், நல்ல செய்தி ஒன்று சென்றுள்ளது. 1.80 லட்சம் பேர் மேல்முறையீடு மற்றும் புது விண்ணப்பம் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதில் 90% பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட வாய்ப்பு உள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More : அச்சுறுத்தும் அமீபா மூளைக்காய்ச்சல்..!! குழந்தைகளை இதற்கு மட்டும் அனுமதிக்காதீங்க..!!

Tags :
உரிமைத்தொகைமகளிர் உரிமைத்தொகைவங்கிக் கணக்குவிண்ணப்பம்
Advertisement
Next Article