For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காங். மாவட்ட தலைவர் மர்ம மரணத்தில் அதிரடி திருப்பம்.! 'போலீசாரிடம் சிக்கிய மரண வாக்குமூலம் கடிதம்..' மரணத்தின் பின்னணி என்ன?

10:16 AM May 05, 2024 IST | Mari Thangam
காங்  மாவட்ட தலைவர் மர்ம மரணத்தில் அதிரடி திருப்பம்    போலீசாரிடம் சிக்கிய மரண வாக்குமூலம் கடிதம்    மரணத்தின் பின்னணி என்ன
Advertisement

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து புதூரைச் சேர்ந்தவர் கே.பி.கே ஜெயக்குமார் தனசிங். தொழிலதிபரான இவர், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். கடந்த 2ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே சென்ற ஜெயக்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்த நிலையில், சந்தேகமடைந்த ஜெயக்குமாரின் மகன், தந்தையை காணவில்லை என உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisement

புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார், கடந்த 2 நாட்களாக ஜெயக்குமாரை தேடி வந்தனர். இந்த நிலையில்தான், ஜெயக்குமார் தனசிங் அவரது தோட்டத்திலேயே பாதி எரிந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து  நேற்று மாலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிவுற்றது. இன்று காலை 8 மணிக்கு அவரது உடலை உறவினர்கள் மருத்துவமனையில் இருந்து பெற்றுச் சென்றனர். இந்தநிலையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் இறப்பதற்கு முன்பாக மரண வாக்குமூலம் கடிதம் கொடுத்ததாகவும் அதன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லையென புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக நெல்லை போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 02.05.2024 அன்று ஜெயக்குமார் தனசிங் மகனான கருத்தையா ஜெஃப்ரின் என்பவர் உவரி காவல் நிலையம் சென்று தனது தந்தையை காணவில்லை என புகார் மனு அளித்ததன் அடிப்படையில் உவரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக 3 தனிப்படைகள் அமைத்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் விசாரணையை துரிதப்படுத்தினார்.

புகாரளிக்க வந்த போது தான் தனது தந்தையின் அறையில் இருந்ததாக குறிப்பிட்டு ஒரு கடிதத்தை ஆஜர் செய்தார். அந்த கடிதத்தில் 30.04.2024 என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதம், அவர் புகாரளித்த போதுதான் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கு முன்பு யாரிடமும் புகார் அளிக்கவில்லை. விசாரணை தொடர்ந்த போது 04.05.2024 காலை அவரது தோட்டத்தில் எரிந்து நிலையில் சடலமாக கிடந்ததையடுத்து, அவரது உடல் மீட்கப்பட்டு வழக்கை துரிதப்படுத்தும் வகையில் அனைத்து அறிவியல் பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 7 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனகுறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, அவரது உடலுக்கு முன்னாள் காங்கிரஸ் எம்.பி ராமசுப்பு மற்றும் அவரது உறவினர்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Tags :
Advertisement