For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கொல்கத்தா பலாத்கார குற்றவாளிக்கு 'விலங்கு போன்ற உள்ளுணர்வு'!. ஆபாசத்திற்கு அடிமையானவர்!. உளவியல் சோதனை!

Kolkata rape accused has 'animal-like instinct', showed no guilt: Psychoanalytic test
07:25 AM Aug 24, 2024 IST | Kokila
கொல்கத்தா பலாத்கார குற்றவாளிக்கு  விலங்கு போன்ற உள்ளுணர்வு    ஆபாசத்திற்கு அடிமையானவர்   உளவியல் சோதனை
Advertisement

Kolkata rape: பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராயிடம் உளவியல் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் செயல்படும் ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த பெண் மருத்துவர் கடந்த 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல்வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

Advertisement

இந்த கொலை தொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் நேற்று உளவியல் சோதனை நடத்தப்பட்டது. சிபிஐ குழுவை சேர்ந்த 5 மருத்துவர்கள், சஞ்சய் ராயின் மனநிலையை பரிசோதித்தனர். அடுத்த கட்டமாக நீதிமன்ற அனுமதியுடன் உண்மை கண்டறியும் சோதனையை நடத்தப்பட்டுள்ளது. கைதான சஞ்சய் ராய் எவ்விதகுற்ற உணர்வும் இல்லாமல் இருக்கிறார். அவரது மனநிலையை அறிய உளவியல் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. அவர் காவல் துறையை சேர்ந்தவர் கிடையாது. ஆனால் காவலர்களுக்கான குடியிருப்பில் ஏஎஸ்ஐ-க்கான வீட்டில் அவர் தங்கி உள்ளார்.

கொல்கத்தா கற்பழிப்பு-கொலை வழக்கில் பிரதான குற்றவாளியான சஞ்சய் ராயின் மனோதத்துவ விவரம், அவர் ஆபாசத்திற்கு அடிமையானவர் என்றும், "விலங்கு போன்ற உள்ளுணர்வு" கொண்டவர் என்றும், குற்றத்திற்காக எந்த வருத்தமும் காட்டவில்லை என்றும், மத்திய புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் . இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: மும்பை-சென்னை!. 120 கோடியில் தனியார் ஜெட் விமானத்தை வாங்கிய நடிகர் சூர்யா!. ஜோதிகாவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!.

Tags :
Advertisement