முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’நைட் 2 மணிக்கு கதவை தட்டுவாங்க’..!! ’29 வயசு பெண் பார்க்க கூடாத எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன்’..!! உருகிய ஹாசினி..!!

11:59 AM Nov 15, 2023 IST | 1newsnationuser6
Advertisement

ஆர்ஜே-வாக தனது பயணத்தை தொடங்கியவர் கருணா விலாசினி. இவர் சின்ன திரையில் ஹாசினி என்ற பெயரில் அறியப்படுகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாவம் கணேசன் சீரியல் மூலமாக நடிகையாக அறிமுகமானார். இந்நிலையில், தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Advertisement

அவர் கூறுகையில், "திருமண வாழ்க்கையில் நான் ஏமாந்து விட்டேன். என் கணவர் எனக்கு மட்டுமில்லாமல் என் குடும்பத்திற்கும் தொல்லை கொடுத்தார். திருமணத்திற்கு பிறகு தான் அவரின் பல மோசடி வேலை எனக்கு தெரிய வந்தது. பல பெண்களுடனும் அவருக்கு தொடர்பு இருக்கு. 29 வயசு பெண் பார்க்க கூடாத எல்லாவற்றையும் நான் பார்த்துவிட்டேன்.

நைட் 2 மணிக்கு சிலர் வந்து கதவை தட்டி உங்க கணவருக்கு இந்த மாதிரி பிரச்சனை என்று கூறுவார்கள். சுத்தமா ஒன்னுமே புரியாது என்ன பிரச்சனை என்று பார்ப்பதற்குள் அடுத்த பிரச்சனை வந்துவிடும். கடவுளிடம் கதறி அழுது வேண்டுவேன். என்னை இந்த பிரச்சனையில் இருந்து வெளியே கொண்டு வா என்று. தினம் தினம் இப்படியே நடந்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்றே தெரியவில்லை.

அப்போதுதான் பிரச்சனை நான் இல்லை. என் கணவர் தான் என்பதை புரிந்து கொண்டு அவரைவிட்டு வெளியில் வந்தேன். 2014ஆம் ஆண்டு ஆரம்பித்த பிரச்சனையில் கேட்காத பேச்சு இல்லை, படாத கஷ்டம் இல்லை, பார்க்காத வழக்கறிஞர் இல்லை, இழக்காத நண்பர்கள் இல்லை" என்று ஹாசினி கூறியுள்ளார்.

Tags :
நடிகை கருணா விலாசினிவிஜய் டிவிஹாசினி
Advertisement
Next Article