For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

முத்தக்காட்சிகள் குறித்து பேசிய பிரபலம்...! பெரிய பட வாய்ப்புக்காக செய்தேன்...

03:17 PM May 11, 2024 IST | shyamala
முத்தக்காட்சிகள் குறித்து பேசிய பிரபலம்     பெரிய பட வாய்ப்புக்காக செய்தேன்
Advertisement

பிரபல நடிகையான சோனாக்சி சின்ஹா முத்தக்காட்சிகள் குறித்து சமீபத்திய பேட்டில் ஒன்றில் மனம் திறந்துள்ளார்.

பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா முன்னணி நாயகியாக வலம் வருகிறார். கடந்த 2010-ம் ஆண்டு வெளியான தபாங் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் இவர் ரஜினிக்கு ஜோடியாக 'லிங்கா' படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து 14 வருடங்களாக சினிமாவில் நடித்து வரும், சோனாக்சி சின்ஹா பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Advertisement

அதில், தற்போது எனது 35-வது படத்தில் நடித்து வருகிறேன். ஒரு நல்ல நடிகருக்கு எப்போதும் வேலை இருக்கும். இதுவரை என் வாழ்க்கையில் எந்த படத்திலும் முத்தக்காட்சிகளில் நடித்ததில்லை. நான் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் இயக்குனரிடம் தொடக்கத்திலேயே இப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிடுவேன் என்றார்.

மேலும், சினிமாவுக்கு வந்த புதிதில் எனக்கு சிறிய வேடங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்பு வந்தது. ஆனால், எனக்கு பெரிய பட வாய்ப்பு ஒரு நாள் கிடைக்கும் என்று உறுதியுடன் இருந்தேன். அதனால், சிறிய வேடம் என்பதை நினைக்காமல் அதை செய்தேன் என்று சோனாக்‌ஷி சின்ஹா கூறியுள்ளார்.

Read More: மூக்கில் இருந்து அகற்றப்பட்ட புழுக்கள்…! உறவினர்கள் அதிர்ச்சி….

Advertisement