For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மனைவி கழுத்தை அறுத்து கொலை! மதுபோதை கணவரால் சீரழிந்த குடும்பம்..!!

08:02 PM Apr 04, 2024 IST | Baskar
மனைவி கழுத்தை அறுத்து கொலை  மதுபோதை கணவரால் சீரழிந்த குடும்பம்
Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் கோட்டை தெருவைச் சேர்ந்தவர் பூ வியாபாரி மகேந்திரன். தனது சொந்த அத்தை மகளான பாரதி என்பவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.

Advertisement

இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், மதுப்பழக்கம் கொண்ட மகேந்திரன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவி பாரதியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அண்மையில் மகேந்திரன் கர்நாடக மாநிலம் சர்ஜாபுரம் பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். மீண்டும் வீடு திரும்பிய மகேந்திரன் போதை பழக்கத்தை விடாமல் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், மீண்டும் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டையில் பாரதி, திப்பாளத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு 15 நாட்கள் கழித்து நேற்று கணவன் வீட்டிற்கு வந்த நிலையில், மகேந்திரன் மனைவி பாரதியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இன்று காலை மகேந்திரனின் தாய் வீட்டை திருந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் கிடந்த மருமகள் பாரதி உடலைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாகலூர் காவல் நிலைய போலீசார், பாரதி உடலை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து போலீசார் மகேந்திரனை தேடி வந்த நிலையில் நேற்றிரவு அதேபகுதியில் சுற்றித்திரிந்த அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

Advertisement